போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். தேர்தல் பிரசார காலத்தில் எதிர்க்கட்சிகள் ‘குடு’ உள்ளிட்ட போதைப்பொருட்களை தங்கள் ஆதரவாளர்களிடம் விநியோகித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
“தேர்தலை ஒரு பக்கம் வையுங்கள். ஆனால் அமைச்சர் சத்துரங்க அபேசிங்க வைத்திருக்கும் குற்றச்சாட்டு மிகச் பாரதூரமானது. இந்த குற்றச்சாட்டை தீர்மானிக்க, அவர் குறிப்பிடும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களின் முழுப் பெயர் விபரங்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்” என மனோ கணேசன் தெரிவித்தார்.