Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

சவூதி அரேபிய தூதுவரை சந்தித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்

Posted on May 17, 2025 by Admin | 59 Views

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானியை இன்று (16) கொழும்பிலுள்ள தூதரகத்தில் சந்தித்து விசேட கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு பல்வேறு சமகால பிரச்சினைகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்துக் கொண்டதாக இருந்தது. இதனைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சவூதி தூதுவருடன் ஒரு சுமூகமான மற்றும் பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது. நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிகள் குறித்தும் விரிவாகப் பேசினோம். தூதுவரின் அன்பான வரவேற்பையும், உறவுகளை வலுப்படுத்துவதில் காட்டும் அர்ப்பணிப்பையும் நான் உளமார பாராட்டுகிறேன்,” என்றார் ரிஷாட் பதியுதீன்.