தெஹிவளை – நெதிமாலை பிரதேசத்தில் அமைந்துள்ள கடையொன்றில் இன்று மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.