Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

கனமழையால் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகள் கவனத்திற்கு

Posted on May 19, 2025 by Hafees | 214 Views

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

மழையினால் சாலை மேற்பரப்பில் வழுக்கல் ஏற்படக்கூடியதால் விபத்து அபாயம் அதிகரிக்கக்கூடும் என்பதையும், இந்த நிலையில் அதிக வேகத்தில் செலுத்துதல் ஆபத்தாக இருக்கலாம் என்பதையும் அதிகாரசபை எச்சரித்துள்ளது.

அதன்படி, மழை பெய்யும் போது சாரதிகள் மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்திலேயே பயணிக்க வேண்டும் என அதிவேக நெடுஞ்சாலை செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு பிரிவின் துணைப் பொது மேலாளர் ஆர்.ஏ.டி. அறிவுறுத்தியுள்ளார்.

பாதுகாப்புக்காக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைவரும் இந்த அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.