Top News
| 2025 உயர்தர பரீட்சைக்கான திகதி வெளியானது  | | ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம்.எச்.எம். இஸ்மாயில் காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளராக தெரிவு | | இலங்கையில் ஓரிரு மாதங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா? |
Jun 25, 2025

பாதாள உலக துப்பாக்கிச் சூடுகளில் அரசியல் தலையீடு பாதுகாப்பு அமைச்சர் வாக்குமூலம்

Posted on May 20, 2025 by Hafees | 87 Views

நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான துப்பாக்கிச் சூடுகளில்அரசியல் தலையீடுகள் உள்ளமை புலனாய்வுத் தகவல்களில் இருந்து உறுதியாகக் கண்டறியப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜெபால இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

மேலும், இந்த துப்பாக்கிச் சூடுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதியின் பெயர் விரைவில் அம்பலமாகும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜெபாலக் கூறியுள்ளார்.