Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

பாதாள உலக துப்பாக்கிச் சூடுகளில் அரசியல் தலையீடு பாதுகாப்பு அமைச்சர் வாக்குமூலம்

Posted on May 20, 2025 by Hafees | 165 Views

நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான துப்பாக்கிச் சூடுகளில்அரசியல் தலையீடுகள் உள்ளமை புலனாய்வுத் தகவல்களில் இருந்து உறுதியாகக் கண்டறியப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜெபால இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

மேலும், இந்த துப்பாக்கிச் சூடுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதியின் பெயர் விரைவில் அம்பலமாகும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜெபாலக் கூறியுள்ளார்.