மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது – அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
நாடு முழுவதும் பல அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் குறைவாக உள்ளதைக் கருத்தில் கொண்டு, மருந்து பற்றாக்குறை மோசமடைந்துள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் ஊடக பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க கூறுகையில், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி நிவாரணிகள் மற்றும் இன்சுலின் உள்ளிட்ட முக்கிய மருந்துகள் தற்போது கடுமையாகக் குறைந்துள்ளன என்றும், நிலைமை தொடர்ந்து மோசமடைவதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
“மருத்துவமனைகள் பலவும் மருந்து பற்றாக்குறை குறித்து தொடர்ந்து விளக்கம் வருகின்றன. ஏப்ரல் மாத இறுதிக்குள் மருத்துவ விநியோகத் துறையில் சுமார் 180 மருந்துகள் கையிருப்பில் இல்லை. அதேபோல், மருத்துவமனை அமைப்புகளில் 50க்கும் மேற்பட்ட மருந்துகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், அறுவை சிகிச்சைகள் மற்றும் நுட்ப உபகரணங்களுக்கான மருந்துகளிலும் கடுமையான பற்றாக்குறை காணப்படுவதாகவும், இது தேசிய மட்டத்தில் மட்டுமல்லாது பிராந்திய ரீதியிலும் பாரிய சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும்” அவர் கூறினார்.