Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

மத்திய மலைநாட்டில் விபத்துகள் அதிகம் நிகழும் வீதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்க திட்டம்

Posted on May 21, 2025 by Hafees | 197 Views

மத்திய மலைநாட்டில் வாகன விபத்துகள் அதிகம் ஏற்படக்கூடிய பகுதிகளில், வீதிகளின் இருபுறமும் பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

விபத்துக்கள் நிகழும் இடங்களை அடையாளம் காணும் பணியில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், கடந்த காலங்களில் விபத்துக்கள் பதிவான பகுதிகளுக்கு மேலதிக கவனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சிறப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் சுமார் 500 அபாயகரமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை அவற்றில் 40 இடங்களில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.