(அபூ உமர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, நாட்டின் முக்கிய அமைச்சுக்களின் ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனம், நீர்ப்பாசன, விவசாயம், கால்நடை, காணி, மின்சக்தி, பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சுகளின் ஆலோசனைக் குழுக்களை உள்ளடக்கியது. இதனுடன், அவர் பாராளுமன்ற சபைக் குழுவிலும், தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையிலும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு,கிராமிய மின்சார அமைச்சராக மூவின மக்களுக்கும் சேவை செய்து மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.
வழங்கப்பட்டுள்ள நியமனங்கள் மூலம், நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும், அரசியல் தீர்மானங்களிலும் அவரது பங்களிப்பு அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.