அக்கரைப்பற்றில் அமைந்துள்ள திருக்கோவில் கல்வி வலத்திற்குற்பட்ட ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தின் ஆசிரியர் மற்றும் அதிபர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலால் இருவரும் காயமடைந்து தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
என்ன நடந்தது?
மேலும் , கடந்த 23ஆம் திகதி, க.பொ.த.சாதாரண தர மாணவர்கள் சிலருக்கு விசேட பயிற்சி செயலமர்வொன்று தம்பட்டையில் இடம்பெறவிருந்தது. இந்நிலையில் அதிபரின் உத்தரவிற்கு அமைய நேற்று பி.ப வேளையில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு சென்ற ஆசிரியர் நாளைய பயிற்சி செயலமர்விற்கு செல்வதற்கு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை முன்பாக ஒன்று கூடுமாறு கூறியுள்ளார். இன்னுமொரு மாணவியின் வீட்டிற்கு சென்று தகவலை சொல்ல முற்பட்ட நிலையில் அவ்வீட்டில் சலசலப்பு சத்தம் கேட்டு தான் சென்ற மோட்டார் சைக்கிளில் திரும்ப எத்தணித்துள்ளார்.அவ்வீட்டிலிருந்து வெளிவந்த நபர் ஒருவர் வாளுடன் ஆசிரியரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, தகவலை பெற்ற அதிபர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார். அங்கு ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் சேதப்படுத்தப்படுவதையும் காண நேரிட்டது. அவர் காயமடைந்த ஆசிரியரை மீட்டுச் செல்ல முயன்றபோது, அதிபரையும் அந்த நபர் வாளால் தாக்கியுள்ளார்.
காவல்துறை நடவடிக்கை
இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் அளித்த உதவியுடன், சந்தேகத்துக்குரிய நபர் ஒருவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு கேள்விக்குறி
இந்த வன்முறைச் சம்பவம், கல்வி நிறுவனங்களைச் சுற்றியுள்ள பாதுகாப்பு சூழலைப் பற்றி கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் மாணவர்கள் இப்போது கூட கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கே அச்சமடைகின்றனர் என பாடசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.
சமூகத்தின் எதிர்வினை
இது போன்ற தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் எனப் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்..