Top News
| பல மாகாணங்களில் மழை மற்றும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கை – வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் | | இலங்கை காவல்துறையின் அதிகாரங்களில் மாற்றம்- அதிவிசேட வர்த்தமானி வெளியீடு | | இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியல் – புதிய வர்த்தமானி அறிவிப்பு |
May 31, 2025

ரயில் சாரதிகள் சுகயீன விடுப்பு காரணமாக பல ரயில் சேவைகள் ரத்து

Posted on May 26, 2025 by Hafees | 75 Views

இன்று (மே 26) காலை பல ரயில் சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதற்கான முக்கிய காரணம், ரயில் சாரதிகள் சுகயீன விடுப்பு அறிவித்ததாலே என ரயில்வே பிரதி பொது மேலாளர் வி.எஸ். பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

இந்த காரணத்தால், இன்று காலை ஏராளமான பயணிகள் பயணத்திற்கேற்ப சிரமங்களை சந்தித்தனர். சுமார் 15 ரயில் சேவைகள் இன்று இயங்க முடியாமல் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுபற்றி மேலும் விளக்கம் அளித்த பொல்வத்தகே கூறியதாவது:
“வார இறுதியில் சாரதிகள் தங்கள் தேவைகளுக்காக விடுப்பு கோரினாலும், ரயில்வே துறையால் அவை வழங்கப்படுவதில்லை. எனவே, அவர்கள் சுகயீன விடுப்பாக மாற்றி, தங்கள் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள். இத்தகைய விடுப்புகள் காரணமாகவே இன்று பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன” என்றார்.