(ஹபீஸ்)
அட்டாளைச்சேனை ஷர்க்கியா அரபுக் கல்லூரிக்கு முன்பாக இன்று (27.05.2025) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் கனரக டிப்பர் வாகனமும் மோதியதால், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பாலமுனையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.