Top News
| அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு | | கேன்களில் எரிபொருள் நிரப்புவதற்கு தடை | | முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினர் பிணையில் விடுவிப்பு |
Jun 19, 2025

நுவரெலியாவில் சீரற்ற வானிலை: பல இடங்களில் பனி மூட்டம், மின்சாரம் துண்டிப்பு

Posted on May 29, 2025 by Admin | 82 Views

சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 71 குடும்பங்களைச் சேர்ந்த 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நேரத்தில், நுவரெலியா – பதுளை, நுவரெலியா – கண்டி மற்றும் நுவரெலியா – ஹட்டன் ஆகிய பிரதான வீதிகளில் ப்ளாக்பூல் சந்தி, வெண்டிகோனர், நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பனி மூட்டம் காணப்பட்டது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால், பாதிக்கப்பட்ட வீதிகளில் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறும், வாகனங்களின் முகப்பு விளக்குகளை இயக்குமாறும், போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும், நோட்டன்பிரிஜ் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.