Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களுக்கு சுற்றியுள்ள சமுதாயத்தை புரிந்து கொள்ளும்  விழிப்புணர்வு நிகழ்வு

Posted on May 30, 2025 by Admin | 251 Views

(ஹபீஸ்)

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ், அறபா வித்தியாலய மாணவர்களுக்கான சிறப்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (மே 29) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் செயற்பாடுகள், இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் அரச ஓய்வூதியத் திட்டம், உளவளத்துணையின் முக்கியத்துவம், மற்றும் சமூக சீர்திருத்தத்தின் அவசியம் போன்ற முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில், பிரதேச செயலகத்துடன் தொடர்புடைய பல துறைகளின் உத்தியோகத்தர்கள் பங்கேற்று, மாணவர்களுக்கு விளக்கங்களும், அறிவுரைகளும் வழங்கினர். நிகழ்வானது மாணவர்களிடையே சமூகப் பொறுப்பை ஊக்குவிக்கவும், நவீன சூழ்நிலைகளில் உள்ள அபாயங்களை புரிந்து கொள்வதற்கும் வழிவகுத்தது.