Top News
| துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு காவல்துறை அதிகாரி உயிரிழப்பு! | | மட்டக்களப்பு புகையிரத சேவைக்கான ஆசனப் பதிவினை கல்முனையில் மேற்கொள்ள நடவடிக்கை | | வருமானம் மீறி சொத்துக்கள் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது வழக்கு |
Jun 6, 2025

சீரற்ற காலநிலை காரணமாக 29,000க்கும் மேற்பட்ட மின்வெட்டு பதிவு

Posted on May 30, 2025 by Hafees | 49 Views

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதுவரை 29,015 மின்தடை தொடர்பான முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும், மின்விநியோக சேவையில் ஏற்பட்டுள்ள இடையீடுகளை சரிசெய்யும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்பட்டிருந்தால், பொதுமக்கள் 1987 என்ற அவசர இலக்கத்திற்கும், அல்லது “CEBCare” என்ற செயலியின் மூலமாகவும் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் எனவும் மின்சார சபை அறிவுறுத்தியுள்ளது.