Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

சீரற்ற காலநிலை காரணமாக 29,000க்கும் மேற்பட்ட மின்வெட்டு பதிவு

Posted on May 30, 2025 by Hafees | 184 Views

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதுவரை 29,015 மின்தடை தொடர்பான முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும், மின்விநியோக சேவையில் ஏற்பட்டுள்ள இடையீடுகளை சரிசெய்யும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்பட்டிருந்தால், பொதுமக்கள் 1987 என்ற அவசர இலக்கத்திற்கும், அல்லது “CEBCare” என்ற செயலியின் மூலமாகவும் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் எனவும் மின்சார சபை அறிவுறுத்தியுள்ளது.