Top News
| யானை-மனித மோதல்களை சமாளிக்க மாவட்ட குழுக் கூட்டத்தில் பல பரிந்துரைகளை கூறிய பிரதித் தவிசாளர் பாறுக் நஜித் | | அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக சபைக்கு தெரிவாகியோர் விபரம் | | அஷ்ஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் றஸீன் எழுதிய இரு முக்கிய நூல்கள் நாளை வெளியீடு |
Jul 25, 2025

சீரற்ற காலநிலை காரணமாக 29,000க்கும் மேற்பட்ட மின்வெட்டு பதிவு

Posted on May 30, 2025 by Hafees | 75 Views

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதுவரை 29,015 மின்தடை தொடர்பான முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும், மின்விநியோக சேவையில் ஏற்பட்டுள்ள இடையீடுகளை சரிசெய்யும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்பட்டிருந்தால், பொதுமக்கள் 1987 என்ற அவசர இலக்கத்திற்கும், அல்லது “CEBCare” என்ற செயலியின் மூலமாகவும் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் எனவும் மின்சார சபை அறிவுறுத்தியுள்ளது.