Top News
| மூதூர் வேதத்தீவு மக்களின் வாழ்நாள் கனவான பாலத்தினை அமையுங்கள் | | மேல் மாகாண பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம் | | அட்டாளைச்சேனையைப் பெருமைப்படுத்தும் இளம் பேராசிரியர் |
Jun 6, 2025

இலங்கை காவல்துறையின் அதிகாரங்களில் மாற்றம்- அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

Posted on May 31, 2025 by Admin | 71 Views

இலங்கை காவல்துறையின் இடமாற்றங்கள், இடைநிறுத்தங்கள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரங்களில் திருத்தம் மற்றும் நீக்கங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களை அதிகாரப்பூர்வமாக நிலைநிறுத்தும் வகையில், அரசு புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

புதிய வர்த்தமானி, 2025 ஆம் ஆண்டின் ஜூன் 1ஆம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, காவல்துறையின் நடவடிக்கைகளில் மேம்பாடு மற்றும் ஒழுங்கு நிலைநாட்டும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.