Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

இலங்கையில் மீண்டும் PCR பரிசோதனை

Posted on June 2, 2025 by Admin | 128 Views

இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதையொட்டி, இலங்கை துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் தொற்றாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சிலாபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

“தற்போது வைத்தியசாலைகளில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்படுபவர்களுக்கு மட்டும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குள் வரும் பயணிகள் மூலமாக வைரஸ் பரவல் ஏற்படும் அபாயம் உள்ளதால், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் கட்டாயமாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.”

உரிய கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தால், நாட்டில் மீண்டும் கொரோனா பரவலின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.