Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண உயரதிகாரிகள் இடையே சந்திப்பு

Posted on June 2, 2025 by Admin | 239 Views

கிழக்கு மாகாண சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான பிஎஸ்ஜிஎஸ்(PSGS) நிதி ஒதுக்கீடுகளை எவ்வாறு பயன்படுத்து வேண்டும் என்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல், அம்பாறை மாவட்ட ஆளுநரின் செயலகத்தில் நேற்று முன்தினம் (மே 31) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், கல்வி, சுகாதார, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன் போது, மாவட்ட அபிவிருத்தி, சமூக சேவைகள், கல்வி மற்றும் சுகாதார துறைகளில் நிதி ஒதுக்கீடுகள் சிறப்பாக அமைய வேண்டிய அவசியம் குறித்தும் பேசப்பட்டதாக அறியப்படுகிறது.