Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

பகிடி வதையினால் மாணவி தற்கொலைக்கு முயற்சி – நால்வர் கைது

Posted on June 3, 2025 by Admin | 243 Views

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்லூரிக்கு அருகிலுள்ள ஆற்றில் நேற்று (ஜூன் 2) பிற்பகலில் மாணவி ஒருவரால் குதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், அந்த மாணவிக்கு சக மாணவர்கள் சிலர் பகிடி கொடுத்ததாலே மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட நால்வர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்துவருகின்றனர். கல்வி நிலையங்களில் பகிடிவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் வலியுறுத்துகிறது.