கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் முதல் கொழும்பு கோட்டை வரை புதிய அதிவேக நெடுஞ்சாலை பேருந்து சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.187 எயார் கண்டிஷனட் (A/C) பேருந்து இந்த சேவைக்காக பயன்படுத்தப்படும் என்றும், கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வழியாக இயங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பயணிகளுக்கு மேலும் வசதியாக இருப்பதற்காக தொடங்கப்பட்ட இந்த சேவை தினமும் 24 மணிநேரமும், வாரத்தின் ஏழு நாட்களிலும் தொடரும் என கட்டுநாயக்க விமான நிலையம் அறிவித்துள்ளது.