Top News
| அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | வான வேடிக்கையான துடுப்பாட்டத்தினால் வீரமுனை மின்னொளி மென்பந்து சுற்றுப்போட்டியை கைப்பற்றிய அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி | | முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் வட – கிழக்கில் இன்று நடைபெறும் ஹர்த்தால் காலையில் மாத்திரம் இடம்பெறும் |
Aug 18, 2025

மழைக்காலம் காரணமாக நாடு முழுவதும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு பரவும் அபாயம்

Posted on June 5, 2025 by Arfeen | 200 Views

நிலவும் மழைக்கால சூழ்நிலை காரணமாக சிக்குன்குன்யா மற்றும் டெங்கு போன்ற தொற்றுநோய்கள் நாடு முழுவதும் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான எச்சரிக்கையை கல்வி அமைச்சுக்கு சுகாதார அமைச்சு அனுப்பியுள்ளது.மேலும், கடந்த மே 31 ஆம் திகதி வரை நாடு முழுவதும் பதிவான டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.