சுங்க தரப்பினரின் சோதனை இன்றி விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் தொழில்துறை சார் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் மாத்திரமே அடங்கியிருந்ததாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த கொள்கலன்களில் சட்டவிரோதமான அல்லது சந்தேகத்திற்குரிய ஆயுதங்களோ அல்லது போதைப்பொருட்களோ காணப்படவில்லை என தான் நம்புவதாகவும் சுங்கத் துறையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கோட தெரிவித்துள்ளார்