Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்ற கப்பலில் தீ விபத்து

Posted on June 9, 2025 by Arfeen | 130 Views

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கப்பலில் 22 பணியாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 18 ஊழியர்கள் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து கடலில் குதித்து தப்பியதாகவும் கூறப்படுகிறதுதீ விபத்துக்கான காரணம் குறித்தான தகவல் தெரியவில்லை. மீட்பு நடவடிக்கையில் கடலோர காவல்படை ஈடுபட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய வான் ஹை 503 என்ற கப்பல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.