Top News
| “வருகையினை கைரேகையினூடாக பதிவதனை ஏற்க மறுப்பவர்கள் வேறு வேலை தேடலாம்” அமைச்சரவை பேச்சாளர் தபால் ஊழியர்களுக்கு அறிவிப்பு | | கல்லோயா திட்டம் மேம்பாடு குறித்து முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையில் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு |
Aug 19, 2025

குளியாப்பிட்டியவில் பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை கணவர் மீது சந்தேகம்

Posted on June 9, 2025 by Hafees | 55 Views

குளியாப்பிட்டிய – வல்பிடகம பகுதியில் பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக குறித்த பெண்ணின் கணவர் மண்வெட்டியால் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் 43 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.