Top News
| 2025 ஹஜ் ஏற்பாடு மிகச் சிறப்பு – சவூதி அரசின் அர்ப்பணிப்புக்கு முழு முஸ்லிம் சமூகமும் வாழ்த்து | | 2028ஆம் ஆண்டில் கடனில்லா இலங்கை நோக்கி பயணிக்கின்றோம் ஜனாதிபதி உரை | | இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம் |
Jun 16, 2025

குளியாப்பிட்டியவில் பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை கணவர் மீது சந்தேகம்

Posted on June 9, 2025 by Hafees | 26 Views

குளியாப்பிட்டிய – வல்பிடகம பகுதியில் பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக குறித்த பெண்ணின் கணவர் மண்வெட்டியால் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் 43 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.