குளியாப்பிட்டிய – வல்பிடகம பகுதியில் பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக குறித்த பெண்ணின் கணவர் மண்வெட்டியால் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் 43 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.