கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளராக, சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் (SSP) எம்.எஸ். மொஹன்லால் நியமிக்கப்பட்டுள்ளார் என காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இந்தப் பதவிக்கு முன்னதாக, அவர் அதே ஆணைக்குழுவின் ஆலோசனைப் பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நியமனம் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.