பாலஸ்தீன தூதுவர் இஹாப் ஐ.எம். கலீல் அவர்களுக்கும், இலங்கை பிரதமருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு, 2025 ஜூன் 9ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, இலங்கை – பாலஸ்தீன் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான தீர்மானங்கள் பரிமாறப்பட்டன. இருநாடுகளும் எதிர்காலத்தில் ஒற்றுமையும், பரஸ்பர ஒத்துழைப்பும் அடங்கிய உறவுகளை மேலும் விரிவாக்குவதில் உறுதியுடன் இருப்பதையும், இந்த சந்திப்பின் வாயிலாக மீண்டும் உறுதிப்படுத்தினர்.