பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 12ம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் பல முன்னெடுக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய 20 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன. அத்துடன் அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை வரை 35 ரயில் சேவைகள் இடம்பெறுமென ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த ரயில் சேவைகள் இலவசமாக முன்னெடுக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
இதேவேளை ஆரம்பமாகியுள்ள தேசிய பொசன் வாரம் எதிர்வரும் 13ம் திகதி வரை நடைமுறையிலிருக்கும்