ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை பல் வேறு நாடுகளின் ஆதரவுடன் காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தும் தீர்மானத்தை நேற்று (12-06-2025) நிறைவேற்றியது.
ஸ்பெயின் முன்வைத்திருந்த இந்த தீர்மானத்திற்கு இலங்கை உள்ளிட்ட 149 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அதே நேரத்தில் 12 நாடுகள் எதிர்ப்பையும், 19 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் தவிர்ந்தன.
இந்த தீர்மானம், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர்மூட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் ஏதுவாக அமையும் என கூறப்படுகிறது.