Top News
| நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக ACMCயின் ஏ. அஸ்பர் தெரிவு- மாயாஜாலம் நிகழ்த்தும் பிரதேச சபை உறுப்பினர்கள் | | அட்டாளைச்சேனை பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வசம்! | | கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு தாங்கள் உடன்படுகிறோம்- ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை உறுப்பினர்கள் |
Jul 2, 2025

மண்சரிவு அபாய எச்சரிக்கை: 10 மாவட்டங்களில் 2025 ஜூன் 16 முதல் 17 வரை பாதுகாப்பு அறிவுறுத்தல்

Posted on June 16, 2025 by Hafees | 85 Views

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க, களுத்துறை மாவட்டத்தில் மத்துகம, அகலவத்த, வலல்லாவிட, பாலிந்தநுவர, புலத்சிங்கள ஆகிய பிரதேசங்களுக்கும் கண்டி மாவட்டத்தில் கங்கை கோறளை, கோகாலை மாவட்டத்தில் தெரிணியகல, யட்டியாந்தோட்டை, தெஹியோவிட்ட ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, எஹலியகொட, பெல்மடுல்ல, எலபாத்த, கலவான, நிவித்திகல, அயகம, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குமே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.