Top News
| 2024(2025)க.பொ.த(சா/த) பெறுபேறுகள் வெளியீடு தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவித்தல் | | மாணவியின் நிர்வாணப் புகைப்படம் வெளியிட்ட காதலன் கைது | | பங்களாதேஷ் – இலங்கை டெஸ்ட்: 5ஆம் நாள் ஆட்டம் மழையால் தடை |
Jun 21, 2025

யாசகம் மற்றும் சாலைவிற்பனை — சிறுவர்களை பாதுகாக்க நாடளாவிய பொலிஸ் சுற்றிவளைப்பு

Posted on June 21, 2025 by Hafees | 70 Views

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் யாசகம் கேட்பது மற்றும் பொருட்களை விற்பனை செய்வது போன்ற தொழில்களில் ஈடுபடும் சிறுவர்களை தேடி கடந்த வியாழக்கிழமை (19) நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 21 சிறுவர்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு குறித்த சிறுவர்கள் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு , நுகேகொடை , கம்பஹா, பாணந்துறை, களனி, நீர்கொழும்பு, கல்கிஸ்ஸை, களுத்துறை, தங்காலை, அநுராதபுரம், கண்டி, குருணாகல், சிலாபம், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளை இலக்கு வைத்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது