நான்கு ஆண்டுகளாக காதல் உறவில் இருந்த பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்களை சமூக ஊடகங்களில் மற்றும் இணையத்தில் பதிவேற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கணினிக் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் மத்தேகொட, குடமடுவ வீதியைச் சேர்ந்தவர் என்றும், சிஷில் செவன பூங்கா பகுதியில் வசிப்பவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். அவரிடம் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படங்கள், மேலும் மற்றொரு பெண்ணின் ஆபாச தகவல்களும் உள்ள மொபைல் தொலைபேசி மற்றும் மடிக்கணினி கைப்பற்றப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர் தெற்கு மாகாணத்தைச் சேர்ந்த 26 வயது இளம் பெண். அவர் தனது மேலதிக கல்விக்காக 2022 ஆம் ஆண்டு ஹோமாகமவில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். படிப்புக்காக ஹோமாகமவுக்கு வந்ததையடுத்து, அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற சந்தேக நபரை சந்தித்துப் பின்னர் காதல் உறவில் இணைந்திருந்தார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது இணைய குற்றப்பிரிவின் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்றன.