Top News
| அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | வான வேடிக்கையான துடுப்பாட்டத்தினால் வீரமுனை மின்னொளி மென்பந்து சுற்றுப்போட்டியை கைப்பற்றிய அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி | | முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் வட – கிழக்கில் இன்று நடைபெறும் ஹர்த்தால் காலையில் மாத்திரம் இடம்பெறும் |
Aug 18, 2025

தங்காலை வெல்ல துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகு விபத்து – 2 மீனவர்கள் காணாமல் போனனர்

Posted on June 29, 2025 by Hafees | 111 Views

தங்காலை பரவி வெல்ல துறைமுகத்திலிருந்து கடலுக்கு புறப்பட்டு இன்று (29) காலை விபத்துக்குள்ளான நெடுநாள் மீன்பிடி படகில் இருந்து காணாமல் போன இரண்டு மீனவர்களை தேடுவதற்காக, விமானப்படையின் KA-350 பீச்கிராஃப்ட் வகை விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விமானம் வழியாக காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி தற்போது சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்று வருவதாக விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான அந்த நெடுநாள் மீன்பிடி படகில் ஆறு மீனவர்கள் இருந்த நிலையில், அவர்களில் நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.