இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையே சமீபத்தில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து, அமெரிக்கா ஈரானை மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் திட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறது.
அணு ஆயுத வளர்ச்சியை முற்றிலுமாக கைவிட்டு, அணு மின்சக்தி உற்பத்தி திட்டத்தில் மட்டுமே ஈரான் ஈடுபடுவதை உறுதி செய்யும் நோக்கில், அமெரிக்கா பல்வேறு பெரும் சலுகைகள் வழங்கும் முன்முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
🔹 ஈரான் யுரேனியம் செறிவூட்டலை முற்றிலும் நிறுத்தினால்
அமெரிக்காவினால் ஈரானுக்கு வழங்கப்படும் முக்கிய சலுகைகள்:
இந்தத் திட்டங்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் முன்மொழிவுகள் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப்,
“ஈரானுடன் விரிவான அமைதி ஒப்பந்தத்தை உருவாக்க நாம் முயற்சி செய்து வருகிறோம். யுரேனியம் செறிவூட்டலை ஈரான் கைவிட்டு, அணு மின்சக்தி திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெற வாய்ப்பு உள்ளது,” என தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்குப் பகுதி அரசியல் சமநிலை பெறும் முன்னேற்றமாகவும், அணு ஆயுத பரவலை கட்டுப்படுத்தும் முக்கியமான நகர்வாகவும் இதை வல்லுநர்கள் கருதுகின்றனர்.