Top News
| வான வேடிக்கையான துடுப்பாட்டத்தினால் வீரமுனை மின்னொளி மென்பந்து சுற்றுப்போட்டியை கைப்பற்றிய அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி | | முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் வட – கிழக்கில் இன்று நடைபெறும் ஹர்த்தால் காலையில் மாத்திரம் இடம்பெறும் | | எரிபொருள் வவுச்சரில் மோசடி செய்த காத்தான்குடி பொலிஸ் சாரதி விளக்கமறியலில் |
Aug 18, 2025

அட்டாளைச்சேனையில் இன்று இரவு 8 முதல் நாளை காலை 6 வரை குடிநீர் துண்டிப்பு

Posted on July 2, 2025 by Admin | 141 Views

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் குடிநீர் விநியோகம் இன்று (புதன்கிழமை) இரவு 8.00 மணி முதல் நாளை (வியாழக்கிழமை) காலை 6.00 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த நீர் துண்டிப்பு, அம்பாறை கொண்டவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட அவசர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் காரணமாக ஏற்படுகிறது.

இதனை முன்னிட்டு, அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த குடிநீர் பாவனையாளர்கள், தேவையான அளவு நீரை முன்னதாகவே சேமித்து, சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது