Top News
| கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை இளைஞர்கள் தேசிய தொழில் விருதுகள் மூலம் நாட்டின் கவனத்தை ஈர்த்தனர் |
Aug 18, 2025

26 வயது பெண் கொலை- தங்கச் சங்கிலி பறித்த மர்மக்கும்பல் தப்பி ஓட்டம்

Posted on July 3, 2025 by Admin | 127 Views

குருவிட்ட – தேவிபஹல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒருவரது உயிரிழப்பிற்கு காரணமாகியுள்ளது.

26 வயது இளம்பெண்ணொருவர், அடையாளம் தெரியாத நபர்களின் தாக்குதலில் படுகாயமடைந்து, பின்னர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் தெரிவித்ததின்படி, குற்றவாளிகள், குறித்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முற்பட்டுள்ளனர். இதன்போது, வன்முறையாக தாக்கப்பட்ட பெண் படுகாயமடைந்த நிலையில், ரத்னபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மரணமடைந்தவர், தேவிபஹல பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினரை சேர்ந்தவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக குருவிட்ட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.