Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினை நீக்க நடவடிக்கைகள் தீவிரம்

Posted on July 3, 2025 by Admin | 136 Views

இலங்கையில் நீண்ட காலமாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) முற்றாக நீக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். “பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது எமது அரசியல் கொள்கையாகும்,” என அமைச்சர் கூறினார்.

இதேநேரத்தில், நாட்டின் தற்போதைய ஆட்சியின் சக்தியான தேசிய மக்கள் சக்தி (NPP), கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில், PTA சட்டத்தைத் திருத்துவதற்கும் அல்லது நீக்குவதற்கும் உறுதியளித்திருந்தது என்றும் அவர் நினைவூட்டினார்.

அமைச்சர் மேலும் கூறுகையில்:

“ஜனாதிபதி இந்த விடயத்தில் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளார். நீதியமைச்சின் வழிகாட்டலுடன், சட்ட ரீதியான மாற்றங்களை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.”

இதற்கான குழுவும் ஏற்கனவே நியமிக்கப்பட்டு, PTA சட்டத்தைத் தவிர்த்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய சட்டக் கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்