Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

அரசை அரசு விசாரிக்கும் நிலை – ஜனாதிபதி அதிரடி

Posted on July 8, 2025 by Admin | 256 Views

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை, எந்தவித காலதாமதமின்றியும் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களின் 50 ஆண்டு பணிக்கான நினைவுநாள் விழாவில் கலந்து கொண்டபோது ஜனாதிபதி வெளியிட்டது. கொழும்பு ஆயர் இல்லத்தில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில், மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, “நல்லிணக்கம் மற்றும் சமாதானம் நிலவ வேண்டும் என்ற நோக்குடன், பல தசாப்தங்களாக கர்தினால் மல்கம் ரஞ்சித் பணியாற்றியுள்ளார்” என்றும் புகழ்ந்தார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டிய தேவையை வலியுறுத்திய அவர், “தாம் எதிர்கொள்ளும் எந்தவொரு அழுத்தத்தையும் மீறி, எல்லா சந்தர்ப்பங்களிலும் நீதிக்காக உழைப்பதற்குத் தம்மில் உறுதி உள்ளது” என்று தெரிவித்தார்.

அத்துடன், “இது ஒரு தனிப்பட்ட வழக்கு மட்டுமல்ல, இது அரசாங்கமே அரசாங்கத்தை எதிர்த்து விசாரணை செய்ய வேண்டிய கட்டத்துக்கு வந்திருக்கிறது” என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நீதி நிலைநாட்டப்பட வேண்டிய அவசியத்தை நினைவூட்டிய அவர், “சட்ட மற்றும் நியாய முறைகளினூடாக முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் முடிவுகள் வெளிவரும்” என உறுதியளித்தார்.