Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு தவிசாளர் உவைஸ் தலைமையில் இடம்பெற்றது

Posted on July 8, 2025 by Admin | 199 Views

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு இம்முறை தெரிவாகிய புதிய கௌரவ உறுப்பினர்களுக்கான “சபை நடவடிக்கைகள் மற்றும் சபை கூட்ட நடவடிக்கைகள் தொடர்பான செயலமர்வு” நேற்று (07.07.2025) இடம் பெற்றது.

இந்த நிகழ்வு, புதிதாக பதவியேற்றுள்ள சபையின் தவிசாளர் கௌரவ A.S.M. உவைஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

செயலமர்வில், பிரதித் தவிசாளர் M.F. நஜீத், சபை செயலாளர் L.M. இர்பான், மற்றும் உள்ளூராட்சி நிர்வாகத்தின் பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், புதிய உறுப்பினர்கள் அனைவரும் முழுமையாக பங்கேற்றனர்.

இந்த அமர்வு, புதிய உறுப்பினர்களுக்கான வழிகாட்டும் அம்சங்களை விளக்கி, அவர்கள் எதிர்கால பணிகளில் பொறுப்புணர்வுடன் செயல்பட வழிவகை செய்தது.

நடைமுறையியல் விளக்கங்களுடன் கூடிய இந்த பயிற்சி அமர்வு, உள்ளூராட்சி நிர்வாகத்தின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் முக்கியமானதாக அமைந்தது.