Top News
| கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை இளைஞர்கள் தேசிய தொழில் விருதுகள் மூலம் நாட்டின் கவனத்தை ஈர்த்தனர் |
Aug 18, 2025

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு தவிசாளர் உவைஸ் தலைமையில் இடம்பெற்றது

Posted on July 8, 2025 by Admin | 144 Views

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு இம்முறை தெரிவாகிய புதிய கௌரவ உறுப்பினர்களுக்கான “சபை நடவடிக்கைகள் மற்றும் சபை கூட்ட நடவடிக்கைகள் தொடர்பான செயலமர்வு” நேற்று (07.07.2025) இடம் பெற்றது.

இந்த நிகழ்வு, புதிதாக பதவியேற்றுள்ள சபையின் தவிசாளர் கௌரவ A.S.M. உவைஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

செயலமர்வில், பிரதித் தவிசாளர் M.F. நஜீத், சபை செயலாளர் L.M. இர்பான், மற்றும் உள்ளூராட்சி நிர்வாகத்தின் பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், புதிய உறுப்பினர்கள் அனைவரும் முழுமையாக பங்கேற்றனர்.

இந்த அமர்வு, புதிய உறுப்பினர்களுக்கான வழிகாட்டும் அம்சங்களை விளக்கி, அவர்கள் எதிர்கால பணிகளில் பொறுப்புணர்வுடன் செயல்பட வழிவகை செய்தது.

நடைமுறையியல் விளக்கங்களுடன் கூடிய இந்த பயிற்சி அமர்வு, உள்ளூராட்சி நிர்வாகத்தின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் முக்கியமானதாக அமைந்தது.