Top News
| கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை இளைஞர்கள் தேசிய தொழில் விருதுகள் மூலம் நாட்டின் கவனத்தை ஈர்த்தனர் |
Aug 18, 2025

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்- சபாநாயகர் பதவிக்கு ஆபத்தா?

Posted on July 8, 2025 by Admin | 129 Views

இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் திரு. ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் நடவடிக்கையிலீடுபட்டுள்ளன. இவ்விபரீத தீர்மானம் குறித்து இன்று (ஜூலை 8) கடைசி முடிவு எடுக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய காரணங்களில், சபாநாயகர் அவருக்குரிய சலுகைகளைத் தவிர மேலதிகமாக வசதிகளை பெற்றது, பதவியின் அதிகாரங்களை துஷ்பிரயோகப்படுத்தியது, மேலும் ஆளும் கட்சி தரப்புக்கு எதிரான ஒருதலைப்பட்சமான அணுகுமுறையை மேற்கொண்டது என்பன அடங்கும்.

நேற்று (ஜூலை 7) ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்புக் கூட்டத்தில், சபாநாயகர் பெற்றதாக கூறப்படும் சலுகைகள் மற்றும் அந்தச் செயல்கள் குறித்து பல எம்.பி.க்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தகவல் தெரிவித்தார்.

மேலும், தயாசிறி ஜெயசேகர உள்ளிட்ட சில முக்கிய எதிர்க்கட்சித் எம்பிக்கள் சமீபத்தில் சபாநாயகரை நாடாளுமன்றத்தில் விமர்சித்ததோடு, பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாகவும் அறியப்படுகிறது.

இந்தப் பின்நிலையில், நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.