Top News
| விடுதியிலிருந்து வெளியேறுமாறு தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுறுத்தல் | | பொத்துவில் அரச திணைக்களத்தலைவர்களுடன் எம். எஸ். அப்துல் வாஸித் எம்பி கலந்துரையாடல் | | பொத்துவில் பொதுச் சந்தை புனரமைப்புக்கான கள விஜயம் |
Jul 15, 2025

பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயம் புதிய கல்வி வரலாற்றை எழுதியது!

Posted on July 12, 2025 by Admin | 468 Views

(குரு சிஷ்யன்)

பாலமுனையின் கல்விப் பண்பாட்டை பறைசாற்றும் விதமாக, மின்ஹாஜ் மகா வித்தியாலயம் 2024 (2025) சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் 95% என்ற மிகப்பெரிய தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்து, புதிய வரலாற்றுப் பக்கத்தை எழுதியுள்ளது.

இந்த ஆண்டில் G.C.E. (O/L) பரீட்சைக்கு இப்பாடசாலையிலிருந்து தோற்றிய 73 மாணவர்களில் 69 பேர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். இது கடந்த கால சாதனைகளைத் தாண்டி, பாடசாலையின் கல்வித் தரத்தை உலகறியச் செய்த முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.

மேலும், இப்பாடசாலையைச் சேர்ந்த ஒரு மாணவர் 09A எனும் மிக சிறந்த பெறுபேற்றினைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

பாடவாரியாக பெறுபேறுகள்:

  • தமிழ் மொழியும் இலக்கியமும் – 99%
  • கணிதம் – 71%
  • விஞ்ஞானம் – 86%
  • வரலாறு – 97%
  • இஸ்லாமியம் – 99%
  • சிங்களம் – 100%
  • கணினி கல்வி (ICT) – 95%
  • உடற்கல்வி – 100%
  • ஆங்கிலம் – 86%
  • குடியியல் கல்வி – 98%
  • தமிழ் இலக்கியநயம் – 69%
  • சித்திரம், புவியியல், வணிகக் கணக்கியல், உணவியல் தொழில்நுட்பம் – அனைத்தும் 100%

இந்தச் சாதனையை அடைய பாடசாலை அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒற்றுமையாகக் கைகொடுத்துள்ளனர். அவர்களது அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும் இக்கல்வி வெற்றியின் சாவியாக விளங்குகிறது.

பாலமுனையின் இளம் தலைமுறைகளுக்கு முன்னோடியான இந்தப் பெறுபேறுகள், கல்வி மேம்பாட்டிற்கான புதிய திசையைத் திறந்து வைத்துள்ளன.

தொடரும் வெற்றிகளுக்காக கல்விப் பயணத்தில் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்!