Top News
| அட்டாளைச்சேனை மாணவர்களின் கல்வி மேம்பாடு தொடர்பாக தவிசாளர் உவைஸ் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர் ரஹ்மத்துல்லாஹ் இடையே சந்திப்பு! | | பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஸுஹைல் பிணையில் விடுவிப்பு | | ஒலுவில் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவர்களின் தாக்குதலினால் முதலாமாண்டு 09 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி |
Jul 15, 2025

முன்னாள் அமைச்சர் ராஜித மீது இலஞ்சம் விசாரணை தீவிரம் -15 நாட்களாக தொலைபேசி செயலிழப்பு

Posted on July 13, 2025 by Admin | 87 Views

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வதற்காக தனியார் நிறுவனத்திற்கு குத்தகை வழங்கி, அரசுக்கு ரூ. 2 கோடிக்கும் மேற்பட்ட நட்டம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் பிடியாணை உத்தரவு கோரி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுனவல விசாரணை நடத்தியபோது, சந்தேகநபரை கைது செய்ய சட்டத்திற்குப் பொருந்தாத எந்தத் தடையும் இல்லை என அவர் தெரிவித்தார். ஆனால் பிடியாணை உத்தரவு வழங்குவது அவசியமா என்பதைப் பற்றி தீர்மானிக்க தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, ஜூன் 26 முதல் ராஜித சேனாரத்ன தமக்கு நிரந்தர வசிப்பிடமான வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவருடைய கைபேசி கடந்த 15 நாட்களாக செயலில் இல்லை என்றும், அவருக்கு எழுப்பப்பட்ட அழைப்புகளும் பதிலளிக்கப்படாத நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆணைக்குழு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னாவை முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க அழைத்த போதும், உடல் நிலை காரணமாக சுகவீனம் ஏற்பட்டதாக தெரிவித்து அவர் தொடர்ந்து ஆஜராக மறுத்துள்ளார். இது தொடர்பான மருத்துவ சான்று அல்லது எழுதப்பட்ட பதில்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், அவை தங்களது முறைப்பாட்டு கோப்புகளில் மட்டுமே உள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, நீதிவான் ஹர்ஷன கெகுனவல, சந்தேகநபரை கைது செய்ய எந்த சட்டத் தடையும் இல்லை என்று மீண்டும் உறுதி செய்ததுடன், பிடியாணை உத்தரவு வழங்க வேண்டுமெனில் அதற்கான உரிய ஆவணங்களை தயார் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தினார்.