Top News
| பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது வருட இப்தார் நிகழ்வு | | QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் | | எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வாகன இலக்க எண் படி எரிபொருள் வழங்க நடவடிக்கை |
Mar 19, 2026

அட்டாளைச்சேனை மாணவர்களின் கல்வி மேம்பாடு தொடர்பாக தவிசாளர் உவைஸ் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர் ரஹ்மத்துல்லாஹ் இடையே சந்திப்பு!

Posted on July 15, 2025 by Admin | 319 Views

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் மற்றும் அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளர் எம்.ஏ.எம். ரஹ்மத்துல்லாஹ் ஆகியோருக்கு இடையில் இன்று (15.07.2025) முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.

இச் சந்திப்பின் போது, அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் காணப்படும் ஆசிரியர் மற்றும் பெளதீக வளங்களின் பற்றாக்குறைகள் குறித்து தவிசாளர் உவைஸ் தனது கவலையை வெளிப்படுத்தினார். இவ்விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதை அவர் வலியுறுத்தியதுடன், கோட்டத்தின் பாடசாலைகளின் செயற்பாடுகளை வலுப்படுத்த பிரதேச சபையின் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த வலயக் கல்வி பணிப்பாளர், தற்போதைய சவால்களை விலக்கி எதிர்காலத்தில் கல்விக் கோட்டத்திற்குத் தேவையான வளங்களை வழங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இக்கலந்துரையாடல், அட்டாளைச்சேனைப் பகுதியின் கல்வி முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய அத்தியாயமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இக்கலந்துரையாடலில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். ஹஸீன் அவர்களும் கலந்துகொண்டார்.