(அபூ உமர்)
அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.எம்.ஜீ.எஸ். நாலக களுவெவ அவர்களை இன்று (21.07.2025) கல்வி அமைச்சில் சந்தித்து, மௌலவி ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார்.
இச் சந்திப்பின் போது, நீண்ட காலமாக நாட்டில் மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படாமை, முஸ்லிம் பாடசாலைகளில் மெளலவி ஆசிரியர் பற்றாக்குறை உருவாகி இருப்பது ஆகிய விடயங்களை பாராளுமன்ற உறுப்பினர் கவனத்துக்கொண்டு வந்தார்.
வரலாற்றுப் பின்னணி குறித்து தெரிவித்த அவர்,
அதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில்,
“நாட்டில் 321 அரபுக் கல்லூரிகள் செயற்பட்டு வருகின்றன. இவை இலங்கை கலாசார அமைச்சால் பதிவு செய்யப்பட்டுள்ளவையாகும். ஒவ்வொரு ஆண்டும் 500க்கும் மேற்பட்ட மௌலவிமார்கள் பட்டம் பெற்று வெளிவருகின்றனர். இவர்கள் கல்வித் தகுதிகளையும் தேசிய பரீட்சைச் சித்திகளையும் பெற்றுள்ளனர்(GCE O/L & A/L). இருப்பினும், இஸ்லாம் மற்றும் அரபு பாடத்திற்கான ஆசிரியர்கள் இல்லாத நிலை தொடர்கிறது. எனவே, இந்த வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகிறது,” எனக் கூறினார்.
இந்த கோரிக்கையை ஏற்கையின் பேராசிரியர் நாலக களுவெவ பதிலளிக்கையில்,
“எதிர்கால ஆசிரியர் நியமனங்களில், மௌலவி ஆசிரியர் நியமனங்களும் உரிய முறையில் பரிசீலிக்கப்படும்,” என உறுதியளித்தார்.
இச்சந்திப்பு, பல வருடங்களாக நிலவி வரும் கல்வி அடிப்படை தேவை ஒன்றைத் தீர்க்கும் தொடக்கமாக பார்க்கப்படுகிறது