Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 22, 2026

13 வயதுக்கு முன் குழந்தைகளின் கைகளில் ஸ்மார்ட்போன் கொடுப்பது பற்றி 163 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி முடிவு

Posted on July 23, 2025 by Admin | 379 Views

13 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு, மனநலத்துக்கு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என சமீபத்திய ஒரு பன்னாட்டு ஆய்வு தெரிவிக்கிறது. பெற்றோர்கள் இந்த வகை பயன்பாட்டில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

Human Development and Capabilities எனும் விஞ்ஞான இதழில் வெளியான இந்த ஆய்வின் முக்கியமான கண்டுபிடிப்பு என்னவெனில், 13 வயதுக்கு முன் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகள், குறிப்பாக பெண்கள், தற்கொலை சிந்தனைகள், உணர்ச்சி கட்டுப்பாட்டில் சிக்கல், தங்களின் மதிப்பீட்டில் குறைவு மற்றும் யதார்த்த உலகத்திலிருந்து விலகல் போன்ற சிக்கல்களை அனுபவிக்கிறார்கள்.

அந்தக் குழந்தை எந்த வயதில் ஸ்மார்ட்போனைப் பெற்றுக்கொண்டார் என்பது முக்கியமானது. ஆய்வின் படி, 13வது வயதுக்கு முன்னதாகவே ஸ்மார்ட்போன் பெற்றிருந்தால், மனநல சிக்கல்களின் ஆபத்து கூடுகிறது.

அதிக சமூக ஊடகப் பயன்பாடு, தூக்கத்தின் தடை, இணைய தொந்தரவு (cyberbullying) மற்றும் குடும்ப உறவுகளில் எதிர்மறையான தாக்கங்கள் ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

இந்த ஆய்வு, 163 நாடுகளில் சுமார் 20 இலட்சம் மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான கணக்கெடுப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.

முற்றிலும் சுய அறிக்கைகளின் அடிப்படையில், இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாலும், இது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்குப் பெரும் சிந்தனையளிக்கிறது.

பிள்ளைகளின் நல்லிணக்கம், துயரமின்றி வளர்ச்சிக்காக, தொழில்நுட்ப உபயோகத்தில் பொறுப்பும் கட்டுப்பாடும் இன்றியமையாதது.