Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

டெபிட்/கிரெடிட் கார்ட் ஊடாக பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்

Posted on July 24, 2025 by Admin | 200 Views

வாடிக்கையாளர்கள் தங்களது டெபிட் (Debit) அல்லது கிரெடிட் (Credit) கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் போது, சில வியாபாரிகள் 2.5% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர் என்ற முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. இதனையடுத்து, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இவ்வகை அறவீடு முறைகள் சட்டவிரோதமானவை எனத் தெரிவித்துள்ளது.

வங்கிகளுடன் வியாபாரிகள் கைச்சாத்திடும் ஒப்பந்தங்களில், வாடிக்கையாளர்களிடம் எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி விளக்கியுள்ளது.

“ஒரு வியாபாரி, பட்டியல் விலையைவிட அதிகமாக பணம் கோரினால், வாடிக்கையாளர்கள் தங்கள் கார்டு வழங்கிய வங்கிக்கு உடனடியாக முறைப்பாடு தெரிவிக்கலாம்,” என மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

சில கடைகள், உணவகம் மற்றும் சேவை நிலையங்களில் இந்த விதிமுறைகள் மீறப்படுவதாக வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கொடுத்துவரும் சூழ்நிலையில், மத்திய வங்கியின் இந்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.