ஒலுவில் மற்றும் தீகவாபி பகுதிகளுக்கு தேவையான பொது விளையாட்டு மைதானங்களுக்கான நிலங்களை ஒதுக்கீடு செய்வது குறித்து விசேட ஆலோசனை கூட்டம் இன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கரின் தலைமையில் நடைபெற்றதுடன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களும் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், பிரதேச உதவிச் செயலாளர் திருமதி எப். நஹீஜா முஸக்கீர், பிரதேச செயலாளர் எல்.எம். இர்பான், பிரதேச சபை உறுப்பினர்கள், அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ். சத்தார் மற்றும் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2025 பெப்ரவரி 11ஆம் திகதி நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்கள் ஒலுவில் பிரதேச மக்களுக்கான விளையாட்டு மைதானத்திற்கான ஒலுவில் LRC காணியிலிருந்து இடத்தை வழங்கக் கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் காணி சீர்திருத்தல் ஆணைக்குழுவிற்கான காணியினை நில அளவை செய்வதற்கு 2019 ல் 85,000/- ரூபா செலுத்தப்பட்டும் இதுவரை ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்திற்கான காணி விடுவிக்கப்படாமல் உள்ளது எனத் தெரிவித்ததுடன், தீகவாபி பிரதேசத்தில் விளையாட்டு மைதானத்திற்கான காணியினை வன இலாகாத் திணைக்களத்தினால் விடுவிப்புச் செய்யப்படாமல் உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை பிரேரணை முன்வைத்தார்.
அதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, துறை சார்ந்த அதிகாரிகளுடன் குழுவொன்றை அமைத்து இந்த விவகாரத்தை விரைவில் தீர்வு காணும் வகையில் ஆலோசனை நடத்த உத்தரவு வழங்கியிருந்தார்.இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இன்று இக்கூட்டம் நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
கூட்டம் முடிவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ். உதுமாலெப்பை, ஏ. ஆதம்பாவா, பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் மற்றும் அதிகாரிகள் இணைந்து, காணிகள் அமைந்துள்ள இடத்தை நேரில் பார்வையிட்டனர்.