Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் கைது

Posted on July 28, 2025 by Admin | 186 Views

முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.

திட்டமிட்டு செயல்படும் குற்றக்கும்பல் உறுப்பினரான ‘கெஹல்பத்தர பத்மே’ என்பவரால் தாம் அச்சுறுத்தப்பட்டதாக பொய்யான முறைப்பாடு பதிவு செய்த குற்றச்சாட்டின்பேரில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.