Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

ஜனாதிபதிஅநுரகுமார திசாநாயக்கவிடம் மன்னிப்பு கோரிய திஸகுட்டி ஆரச்சி 

Posted on July 29, 2025 by Admin | 135 Views

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸகுட்டி ஆரச்சி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு எதிராக கடந்த காலத்தில் வழங்கிய அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு தெரிவிக்கத் தயார் என இன்று (29) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அறிவித்தார்.

அநுரகுமார திசாநாயக்க, திஸகுட்டி ஆரச்சிக்கு எதிராக ரூ. 10 பில்லியன் இழப்பீட்டுத் தொகையை கோரி தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு, இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, திஸகுட்டி ஆரச்சியின் சட்டத்தரணிகள் மூலமாக இந்த மன்னிப்பு அறிவிக்கப்பட்டது.