ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதன் காரணமாக, ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்தநிலையில், மாலைதீவிலிருந்து இன்று காலை நாடு திரும்பிய நாமல் ராஜபக்ஷ, நகர்த்தல் பத்திரத்துடன் ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி விடுவிக்க உத்தரவிட்டது.