Top News
| அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | வான வேடிக்கையான துடுப்பாட்டத்தினால் வீரமுனை மின்னொளி மென்பந்து சுற்றுப்போட்டியை கைப்பற்றிய அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி | | முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் வட – கிழக்கில் இன்று நடைபெறும் ஹர்த்தால் காலையில் மாத்திரம் இடம்பெறும் |
Aug 18, 2025

பல மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய விளக்குகளுக்கு அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் கெளரவம்

Posted on August 5, 2025 by Admin | 121 Views

(குரு சிஷ்யன்)

அக்கறைப்பற்று கல்வி வலயத்தின் கீழ் செயல்படும் அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில், பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் கல்வியின் ஒளி பரப்பி, ஓய்வு நிலை அடைந்த அதிபர்களின் பணிப் பயணத்தை கௌரவிக்கும் விழா, “வெளிச்சம் பரப்பிய விளக்குகள்” என்ற பொருத்தமான கருப்பொருளில், 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி, ஒலுவிலில் அமைந்த மஸாலா வில்லா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அட்டாளைச்சேனை கோட்ட அதிபர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கே.எல். உபைத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இவ்விழா, அந்தந்த காலகட்டத்தில் கல்விக்காக அர்ப்பணித்து பணியாற்றிய அதிபர்களை நெஞ்சில் நிற்கும் வகையில் நினைவுகூரச் செய்தது.

கௌரவிக்கப்பட்ட ஓய்வு பெற்ற அதிபர்கள்:

  • ஐ.எம். பாஹிம்
  • எம்.ஏ. அன்சார்
  • ஏ.எம்.எம். இத்ரீஸ்
  • எம்.சி. சரீனா
  • ஏ.சி. நியாஸ்
  • எஸ்.எம். தாஜுதீன்
  • எம்.வை. அப்துல் மஜீத்
  • இஸட். கலீலுர் ரஹுமான்

இவர்கள் ஒவ்வொருவரும் தங்களது கல்விச் சேவையின் ஊடாக, மாணவர்களின் வளர்ச்சி, ஆசிரியர் குழாத்தின் மேம்பாடு மற்றும் சமுதாயத்தின் நலனுக்காக தங்களை அர்ப்பணித்த பெருந்தன்மையுடையவர்கள். அவர்களது நேர்மை, நெறிமுறை, வழிகாட்டுதல் மற்றும் நேர்த்தியான நிர்வாகத்திறன், பல தலைமுறைகளுக்கும் ஒளி வீசும் விளக்குகளாகவே அமைந்துள்ளன.

இந் நிகழ்வில் அக்கறைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். ரஹ்மத்துல்லாஹ்,பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எச். பௌஸ், ஏ.ஜி. பஸ்மில், எம்.எம். சித்தி பாத்திமா, பாத்திமா ஜியானா, அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ரஸ்மி, அட்டாளைச்சேனை கோட்ட அதிபர்கள் மற்றும் கல்வித் துறைசார்ந்த பலர் கலந்து கொண்டு விழாவை இனிமையுடன் சிறப்பித்தனர்.

இவ்விழா, ஒளியுடன் பலர் வாழ்வில் பயன்களை பரப்பிய ஒவ்வொரு அதிபரின் சேவையும் கல்வி வரலாற்றில் நிலைத்திருக்கும் என்பதை நினைவூட்டுவதாக அமைந்தது.