Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

கறிக்குழம்பு சட்டியில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

Posted on August 5, 2025 by Admin | 311 Views

ஆடி மாத குலதெய்வ வழிபாட்டுக்காக குடும்பத்துடன் சென்ற நிலையில், ஒரு 2 வயது சிறுவன் கறிக்குழம்பு கொதிக்கும் சட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்தது.

சிவக்குமார் என்ற நபர் தனது குடும்பத்துடன் வழிபாட்டிற்காக அப்பகுதிக்கு சென்றிருந்தார். வழிபாட்டுக்குப் பின்னர் சமையலுடன் தொடர்புடைய பணிகள் நடந்து கொண்டிருந்த வேளையில், அவரது மகன் விளையாடிக் கொண்டிருந்தபோது சட்டியில் தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்