Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

கறிக்குழம்பு சட்டியில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

Posted on August 5, 2025 by Admin | 362 Views

ஆடி மாத குலதெய்வ வழிபாட்டுக்காக குடும்பத்துடன் சென்ற நிலையில், ஒரு 2 வயது சிறுவன் கறிக்குழம்பு கொதிக்கும் சட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்தது.

சிவக்குமார் என்ற நபர் தனது குடும்பத்துடன் வழிபாட்டிற்காக அப்பகுதிக்கு சென்றிருந்தார். வழிபாட்டுக்குப் பின்னர் சமையலுடன் தொடர்புடைய பணிகள் நடந்து கொண்டிருந்த வேளையில், அவரது மகன் விளையாடிக் கொண்டிருந்தபோது சட்டியில் தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்